தேன்கனிக்கோட்டை, செப்.30: அஞ்செட்டி அருகே சிதிலமடைந்த சாலையை, சீரமைத்த இளைஞர்களை பயணிகள் பாராட்டினர்.
அஞ்செட்டி அருகே, நாட்றாம்பாளையம் முதல் ஒகேனக்கல் வரை சுமார் 7 கி.மீ சாலை சிதிலமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்ல சிரமப்பட்டு வந்தனர். இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.