அஞ்செட்டி அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்த இளைஞர்கள்

தேன்கனிக்கோட்டை, செப்.30: அஞ்செட்டி அருகே சிதிலமடைந்த சாலையை, சீரமைத்த இளைஞர்களை பயணிகள் பாராட்டினர்.

அஞ்செட்டி அருகே, நாட்றாம்பாளையம் முதல் ஒகேனக்கல் வரை சுமார் 7 கி.மீ சாலை சிதிலமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்ல சிரமப்பட்டு வந்தனர். இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று, அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி கடப்பாரை, மண்வெட்டியுடன் மண்ணை வெட்டி குழிகளில் கொட்டி சாலையை சமன் செய்தனர். இதனால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் முறையாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சாலையை தற்காலிகமாக சீரமைத்த இளைஞர்களுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: