திருப்புத்தூர், செப். 26: திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களில் மணிமுத்தாறு வடிநிலக் கோட்டம் மூலம் ரூ.697 லட்சம் மதிப்பீட்டில் 33 கண்மாய்களின் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருவதை நேற்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருக்கோஷ்டியூர் ஊராட்சியில் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் கடம்பன் கண்மாய், கருப்பூர் ஊராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கருப்பூர் கண்மாய், மாதவராயன்பட்டி ஊராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பெரியகண்மாய், மருதிப்பட்டி ஊராட்சியில் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் மருதிப்பட்டி கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் கிருங்காக்கோட்டை ஊராட்சியில் ரூ.15.30 இலட்சம் வடகரமன் தன்குந்தர் கண்மாய் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.திருப்புத்தூர், சிங்கம்புணரி தாலுகாவில் 33 கண்மாய்களில் குடிமராமத்து பணி பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு
- இன்ஸ்பெக்டர் ஜெனரல்
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் 33 கண் கோடுகள் ஆய்வு
- சிங்கம்புனரி தாலுகா
- Thirupputhur