சிவகங்கை, செப். 26: இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடம் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத தொகுப்பூதியம் ரூ.14ஆயிரம் வழங்கப்படும். பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி(கணிதம், புள்ளியியல்) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 40வயதிற்குட்பட்டவராக இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 2ஆண்டுகள் கணினி சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.