கும்பகோணம் அரசு பள்ளியில் காந்தி பிறந்த நாள் விழா

கும்பகோணம், செப். 26: கும்பகோணம் நேட்டிவ் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ரவி கண்ணன் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். முதுகலை உதவி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஜேஆர்சி கன்வீனர் ஜான் ஸ்டீபன் வரவேற்றார்.

காந்தி பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். ஜேஆர்சி கவுன்சிலர்கள் கண்ணன், சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி உதவி தலைமையாசிரியர் இளம்பூரணன் நன்றி கூறினார்.

Related Stories: