கும்பகோணம், செப். 26: கும்பகோணம் நேட்டிவ் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ரவி கண்ணன் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். முதுகலை உதவி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஜேஆர்சி கன்வீனர் ஜான் ஸ்டீபன் வரவேற்றார்.