கலசபாக்கம், செப்.26: கலசபாக்கம் அருகே வளர் இளம்பருவத்தினரின் மனநிலை குறித்து டெல்லி, மும்பை மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.வளர் இளம்பருவத்தினரின் மனநிலை குறித்து அறிய மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்ேவறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களின் மன நிலையை அறிந்து கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சுகாதார துறை மூலம் நடைபெற்று வருகிறது.இதேபோல், வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம். பாலியல் தொந்தரவுகள், போதை வஸ்துகளை பயன்படுத்துதல் தடுத்தல், மனநலம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதில் 10 வயது முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம்பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.