வத்தலக்குண்டு, செப். 25: விபத்துகளை தடுக்க வத்தலக்குண்டு நூலக பகுதியில் வேகத்தடை கட்டாயம் அமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு நூலகம் அருகே அஞ்சலக சாலை, அக்ரஹாரம் சாலை, கடைவீதி சாலை, மாரியம்மன் கோயில் சாலை என நான்கு சாலைகள் சந்திக்கின்றன. கடைவீதியிலிருந்து வாகனங்களிலில் வருவோருக்கு பூங்கா மறைப்பதால் அக்ரஹாரத்திலிருந்து வரும் வாகனங்கள் தெரியவதில்லை. அதேபோல அக்ரஹாரம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு கடைவீதியிலிருந்து வரும் வாகனங்கள் தெரியவதில்லை.