திருவொற்றியூர், செப். 25:
மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர், சிறுமியிடம் தந்தை அழைப்பதாக கூறி நைசாக பேசி அவளை பைக்கில் அமர வைத்துக் கொண்டு வேகமாகச் சென்றார். தெரியாத வழியில் அவர் சென்றதால், சந்தேகமடைந்த சிறுமி பைக்கை நிறுத்தம்படி கூறினார். ஆனால், நிறுத்தாததால் சிறுமி அலறினாள். இதைப் பார்த்த அந்த நபர் சிறுமியை அவசர அவசரமாக இறக்கி விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.உடனே சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவித்தாள். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்.