சேலம் மாவட்டத்தில் 190 மி.மீட்டர் மழை

சேலம், செப்.24:  சேலத்தில் 190 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு வீரகனூர், தம்மம்பட்டி, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழையால், மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள், செழித்து வளர்ந்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: தம்மம்பட்டி 62.4, ஏற்காடு 38, ஆணைமடுவு 31, வீரகனூர் 30, கெங்கவல்லி 8.4, காடையாம்பட்டி 7.2, மேட்டூர் 5.6, இடைப்பாடி 2.4, கரியகோவில் 2, ஓமலூர் 1.4, சேலம் 0.2 என மொத்தம் 190 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories: