நெல்லை, செப். 24: புதிய நீதிமன்றத்தை திறக்க ஏதுவாக புறக்காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. அம்பையை சேர்ந்த சிவசைலநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அம்பாசமுத்திரம் நீதிமன்றம் நூற்றாண்டு பழமையானது. இதனால் புதிய நீதிமன்றம் கட்ட கடந்த 2017ல் பணிகள் துவங்கி தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தின் மேற்கு நுழைவாயில் பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. வாகனங்கள் வந்து செல்ல புறக்காவல் நிலையம் இடையூறாக உள்ளது. இதனால் புதிய நீதிமன்ற கட்டிடம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.