கூடலூர், செப். 20:40 நாட்களுக்கு பின் கூடலூர்-கேரளா சலையில் இலகு ரக வாகன போக்குவரத்து நேற்று துவங்கியது. மேலும் கனரக வாகன செல்ல தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாத துவகத்தில் கனமழை பெய்தததால் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை இணைக்கும் கூடலூர் நிலம்பூர் சாலையில் கீழ்நாடு காணியை அடுத்த மலைப்பாதையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதை சீரமைக்க கேரளா அரசு 20 நாட்களுக்கு பின்னரே பணியை துவங்கி தற்போது வரை அப்பணி நடந்து வருகிறது. இதில் தேன்பாறைப் பகுதியில் மொத்தமாக சரிந்து கிடந்த மிகப்பெரிய அளவிலான பாறைகளை உடைத்து அகற்றும் பணிகள் நடைபெற்று அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து துவங்கும் வகையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்த சாலையில் 40 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை முதல் கார் உள்ளிட்ட இலகு ரக வாகன போக்குவரத்து இயங்கிவருகிறது.