குன்னூர், செப்.20: குன்னூர் பகுதியில் கேரட் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இதில் குன்னூர் அருகேயுள்ள கேத்திபாலாடா பகுதியில்.கேரட் பயிரிட்ட அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. அதனையும் மீறி சில விவசாயிகள் வங்கி, தனிபரிடம் கடன் பெற்று கேரட் பயிரிட்டு வருகின்றனர்.