முசிறி, செப்.20: முசிறியில் நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற பிஇ பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.தொட்டியம் அடுத்த மகேந்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் தமிழ்வாணன் (29). பிஇ முடித்து திருச்சி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று தமிழ்வாணன் முசிறியிலிருந்து தனது பைக்கில் மகேந்திரமங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறி பைபாஸ்சாலையில் பெட்ரோங் பங்க் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் வேகமாக மோதியதில் தமிழ்வாணன் பலத்த காயமடைந்தார்.