கரூர், செப். 20: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் தொழில்முனைவோர் அமைப்பு (என்ட்ரிபிரினர் செல்) கல்லூரி வளாகத்தில் தொழிலமுனைவோருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
டாக்டர் பி.ஷியாம்சுந்தர் துறைத்தலைவர், மென்டர், ஐஇடிசி, மென்டர் இ செல் அண்டு டிடிசி கன்வீனர், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து இந்த நிகழ்வின் மூலம் தொழில்முனைவோருக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு நிதி உதவிகளை நிதி நிறுவனங்கள் மூலமாக பெற்று மேம்படுத்திக்கொள்ளுமாறு கூறினார்.டி.ரமேஷ், பொதுமேலாளர், துணை இயக்குநர், மாவட்ட கைத்தொழில் மையம், கரூர், ஜி.கிரிஷன் , வி.எம்.மோகன் ஸ்வாம் சிஸ்டம்ஸ், மாணவர்களிடம் உரையாற்றினர்.அவர் பொறியியல் மாணவர்களுக்கு வணிகத்தை தொடங்க டிஐசியிலிருந்து கிடைக்கும் பல்வேறு திட்டங்களை பற்றியும், மேலும் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுவதற்கான நன்மைகள் மற்றும் உத்திகள் குறித்தும் எடுத்துரைத்தார்.