ஜெயங்கொண்டம்,செப்.19: உடையார்பாளையம் வட்டம் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சிவசிதம்பரம் தலைமை வகித்தார். மணியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் கங்கைகொண்டசோழபுரத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றும் வகையில் பொன்னேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை சுற்றி பேருந்துகள் மூலம் பயணம் செய்யும் வகையில் தரமான சாலை அமைக்க வேண்டும். ஏரியின் நடுவே சிறு சிறு திடல்கள் அமைக்க வேண்டும். திடல்களில் பறவைகள் வந்து தங்குவதற்கு ஏற்ப மரங்கள் வளர்க்க வேண்டும்.