வாணியம்பாடியில் பயங்கரம் அரசியல் பிரமுகர் தலை துண்டித்து கொலை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி  நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம்(38), மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மகனை அழைத்துக்கொண்டு வசீம் அக்ரம் அருகிலுள்ள மசூதிக்கு சென்றுள்ளார். பின்னர் தொழுகை முடிந்து மாலை 6.30 மணியளவில் மகனுடன் வீட்டிற்கு நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல் வசீம் அக்ரமை சரமாரி வெட்டியது. இதில் அவரது தலை துண்டிக்கப்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்ற போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post வாணியம்பாடியில் பயங்கரம் அரசியல் பிரமுகர் தலை துண்டித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: