காஞ்சிபுரம், செப்.17: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் புத்திரன்கோட்டை பெரியார் நகர், காஞ்சிபுரம் வட்டம் ஏரிவாக்கம், திருப்போரூர் வட்டம் தையூர், ஆலத்தூர், சின்னகாயார், கரும்பாக்கம், குப்பத்துக்குன்று உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.
தாங்கள் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும். பட்டா இல்லாததால் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியவில்லை. மேலும் மின்சாரம், குடும்ப அட்டை உள்ளிட்டவை பெற முடியவில்லை.