பெரம்பலூர்,செப்.17: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப் பிக்க அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சாந்தா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொ ள்வதற்காக தமிழக அர சால் நபர் ஒருவருக்கு ரூ20 ஆயிரம் நிதி உதவி வழங் கும் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க லாம். இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவினர்க ளை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட் சகோதரிகள் புனிதப் பய ணம் மேற்கொள்ள அனு மதித்தும் அரசால் ஆணை யிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆ கிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான்நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவமத தொட ர்புடைய பிற புனித தலங் களையும் உள்ளடக்கியது. இந்தப்புனித பயணம் செப் டம்பர் 2019முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தே சிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாட்கள் வரை மட் டுமே.