திருப்புத்தூர், செப். 11: திருப்புத்தூர் அருகே தென்கரையில் நள்ளிரவில் பெண்ணை தாக்கி காட்டுக்குள் போட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்புத்தூர் அருகே தென்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி பாண்டியம்மாள் (55). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டின் கதவை சிலர் தட்டினர். அப்போது பாண்டியம்மாள் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அடையாளம் தெரியாத மூன்று பேர் திடீரென மயக்க மருந்து தடவிய துணியை பாண்டியம்மாள் மூககில் வைத்து மூடினர். உடனே பாண்டியம்மாள் மயங்கினார். பின்னர் அந்த மர்ம நபர்கள் பாண்டியம்மாவை வீட்டின் பின்புறம் உள்ள ஆரஸ்பத்ரி காட்டுக்குள் தூக்கிச்சென்று தாக்கிவிட்டு போட்டுச் சென்றனர்.