பந்தலூர், செப்.11: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கள்ளிச்சால் ஆதிவாசி காலனியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கூரை வீடுகளுக்கு பிளாஸ்டிக் தார்பை போர்த்தி பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கின்றனர். மழைகாலங்களில் கூரைகளிலிருந்து மழைநீர் கசிவதால் மக்கள் குடியிருக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தங்களுக்கு குடியிருப்புகள் கட்டி தர வேண்டுமென அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதிவாசி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.