பெரம்பலூர்,செப்.11: பெரம் பலூர்-துறையூர் சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தின்கீழ் சாலை விரிவுபடுத்தும் பணிகளுக்காக 100 ஆண் டுகள் பழமைவாய்ந்த 150 புளியமரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி-சென்னை வழித் தடங்களில் தேசிய நெடுஞ் சாலை உள்ளது. இதேபோ ல் பெரம்பலூர்- அரியலூர் சாலை மற்றும் பெரம்பலூர் -ஆத்தூர்சாலை ஆகிய இர ண்டு சாலைகளும் தேசிய நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப் பட்டுவிட்டன.இருந்தும் அரசு விரைவு போக்கு வரத்து கழக பஸ் கள் பயணிக்கக் கூடிய, பெரம்பலூர்- துறையூர் சாலை இன்னும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப் படாமலேயே உள்ளது. 35 கிமீ நீளமுள்ள இந்த பெரம்பலூர் துறை யூர் சாலையில் இரு பகுதி களாக சாலைகள் விரிவு படுத்தப்பட்டு நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டப் பணிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் ஏற்கனவே பெரம்ப லூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி புறவழிச் சாலை யில் இருந்து, துறையூர் புற வழிச்சாலை வரையிலான 30 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை விரிவாக்கப்பணி கள், குரும்பலூர், நக்கசே லம் புறவ ழிச்சாலைகளு டன் அமைக்கத் திட்டமிடப் பட்டு ஆமை வேகத்தில் நட ந்து வருகிறது.இதேபோல் பெரம்பலூர் அரசு மேல்நி லைப்பள்ளி முதல், செஞ் சேரி கடகால் வாய்க்கால் பாலம் வரையிலான, ரூ8.70 கோடி மதிப்பிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டப்பணிகள்,கடந்த நான் கு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, சாலையி ன் தென்புறம் அகலப்படுத் துவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில், கிராவல் மற்றும் ஜல்லிகள் நிரப்பப் பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட் டிருந்தன.