தென்காசி, செப். 11: மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டியில் பங்கேற்க தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கை எறிபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், மாணவர் லிமான் சூப்பர் சீனியர் பிரிவிலும் வெற்றிபெற்று மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.