நெல்லை,செப்.11: நெல்லை தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நாளை (12ம் தேதி) துவங்கி 14ம் தேதி வரை 60 இடங்களில் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். நெல்லை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தாமிரபணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியதாவது: நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தன்பொருநை என்னும் தாமிரபரணி ஆற்றில் 60 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் குடிமராமத்து பணிகளின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளம், கால்வாய், கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை சீரமைக்கும்பணி பொதுமக்கள் பங்களிப்புடன் போர்கால அடிப்படையில் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நாளை (12ம் தேதி) துவங்கி 13ம் தேதி வரை இருநாட்கள் இயந்திரம் உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.