கரூர், செப். 11: மாணவ மாணவியருக்கான அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள்போட்டி வரும் 14ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி மாணவ மாணவியர்களுக்கு வரும் 14ம் தேதி காலை 6 மணிக்கு துவங்கி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.13 வயதிற்குள் மாணவர்களுக்கு 15 கிமீ, மாணவியர் 10 கிமீ, 15 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கிமீ மாணவியர் 15 கிமீ, 17 வயதிற்குள் மாணவர்கள் 20 கிமீ, மாணவியர் 15 கிமீ,விதிமுறைகள்: மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள் கொண்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். சாதாரண மிதிவண்டியாக இருத்தல் வேண்டும்.அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதி வண்டிகளை பயன்படுத்தக்கூடாது. சைக்கிள் போட்டியின்போது நேரும் எதிர்பாராத விபத்துக்களுக்கு தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பு ஏற்க வேண்டும், போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.