நாகை, செப்.11: நாகையை அடுத்த நாகூரில் தமிழ்நாடு ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரியாக இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு அதில் பி.டெக் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்பு தொடக்க விழா நேற்று முந்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலைகழக துணை வேந்தர் பெலிக்ஸ் தலைமை தாங்கினார், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.