மானாமதுரை, செப். 10: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தை செப்.18ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மானாமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி உள்பட பலர் கலந்து கொண்டார். கூட்டத்தில் மானாமதுரை வைகை ஆற்றில் சாக்கடையை கலக்காமால் செய்ய ஒழுங்கு படுத்த வேண்டும். வைகை ஆற்றில் உள்ள கருவேல் மரங்களை அகற்ற வேண்டும்.