உடுமலை, செப். 10:உடுமலையில் ரவுண்டானா அமைக்கும் ேபாது, சாலை விரிவாக்க பணியும் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே பழனி, பொள்ளாச்சி, பைபாஸ் சாலை இணையும் இடத்தில் ரவுண்டானா அமைக்கும் பணி நடக்கிறது. அப்பகுதியில் முதல் கட்டமாக சாக்கடை கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக டிவைடர் வைக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே சாலை குறுகியுள்ள நிலையில், தற்போது பழனி சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு பணிகள் நடைபெறுவதால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.