பொன்னமராவதி, செப்.10: பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றது. இந்த பேருந்துகளுக்கு இடையூராக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கூறி பேரூராட்சி மற்றும் காவல்துறையினரும் சமீபத்தில் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் கயிறு கட்டி பேருந்துகளை தவிர மற்ற வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் தவிர மற்ற வாகனங்கள் நிறுத்தாமல் இருப்பதால் பேருந்துகள் இடையூறு இன்றி வந்து செல்கின்றன.