கொள்ளிடம், செப்.10: கொள்ளிடம் அருகே புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் பிரதான பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருவது புது மண்ணியாறு. இந்த பிரதான பாசன வாய்க்கால் கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் வாய்க்கால் தூர்ந்தும், நெய்வேலி காட்டாமணக்கு செடி மற்றும் சீமை கருவேல முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கடைமடை பகுதியாக இருந்துவரும் கொள்ளிடம் பகுதிக்கு தண்ணீர் எப்போதுமே தாமதமாகத்தான் வரும்.