காரைக்கால், செப்.10:அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்ட துணை தலைவர் திவ்யநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தமீம், மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, விவசாய தொழிலாளர் சங்க நாகை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பேசியது: