மது விற்ற வாலிபர் கைது

தா.பழூர், ஆக. 20: தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த பெரம்பலூர் சாத்தனூரை சேர்ந்த கருணாநிதி மகன் மருது (22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: