கருப்பம்புலத்தில் கோயில் உண்டியலில் பணம் திருட்டு

வேதாரண்யம், ஆக.20: கருப்பம்புலத்தில் கோயில் உண்டியலின் பூட்டை கள்ளச்சாவி கொண்டு திறந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் ஆப்பகன்னிபாலம் அருகே மெயின் ரோட்டில் அமைந்துள்து தூண்டிகார சுவாமி கோயில். இக்கோயில் பூசாரியாக இருப்பவர் ஆறுமுகம். இவர் பூஜையை முடித்து விட்டு சென்றார். காலை பக்தர்கள் பார்த்தபோது கோயில் பூட்டு, உண்டியல் பூட்டுகளை சாவி போட்டு திறந்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: