பொன்னேரி, ஆக. 20: தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை மூடுவதை கைவிட்டு, மதுக்கூடங்களை மூடி நூலகங்கள் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காந்தி பேரவை சார்பில், பூரண மதுவிலக்கு குறித்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் கலந்துகொண்டு பேசியதாவது: “அத்திவரதரை தரிசிப்பதை காட்டிலும், மதுகுடிப்பவரை தடுப்பது சால சிறந்தது. என்னிடம் ஒரு மணி நேரம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வந்துவிடுவேன். இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால்தான் காந்தியின் ஆசீர்வாதம் கிடைக்கும்.