பழநி, ஆக. 14: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி நகரில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த புகையிலை பொருட்களை உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் குட்கா, புகையிலை பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பழநி நகரில் உள்ள சில கடைகளில் இந்த குட்கா, புகையிலை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. பக்தர்கள் அதிகளவில் வரும் கோயில் நகரான பழநியில் இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வேதனையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் செல்லத்துரை தலைமையிலான அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.