திருப்பூர், ஆக. 14: திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் மாற்றுத்திறன் கொண்ட பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் தனித்தனி கால அட்டவணைப்படி நடக்கிறது.இம்மருத்துவ, முகாமில் கண் மருத்துவர், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், முட நீக்கியல் மருத்துவர், உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், அண்ணப் பிளவு மற்றும் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைக்கு ஸ்மைல் ட்ரைன் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மருத்துவ முகாமில் கண்டறியப்படவுள்ள அறுவை சிகிச்சை தேவையான மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை மூலமாகவும், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.