ஊத்துக்கோட்டை, ஆக. 14: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி சிவன் கோயிலில் மகா பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஊபள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. சிவன் கோயில்களில் எங்குமே லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமான் இந்த கோயிலில் மனித வடிவில் பள்ளிகொண்ட நிலையில் இருப்பது இங்கு மட்டும்தான். பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையிலேயே விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.