பொள்ளாச்சி, ஜூலை 24: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளியின் 17வயது மகள், கடந்த 19ம் தேதியன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியை காணவில்லையென்று, அவரது பெற்றோர் ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதித்து விசாரித்தனர். இந்நிலையில், இரண்டு நட்களுக்கு முன்பு, 19வயது வாலிபர் ஒருவர், அந்த மாணவியை அழைத்துகொண்டு ஆனைமலைக்கு வந்துள்ளார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனைமலை போலீசார், அந்த வாலிபரை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.