வாலிபர் தற்கொலை

அரியலூர், ஜூலை 18: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பட்டக்காட்டான்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஐயப்பன் (23). விவசாயியான இவருக்கு சில நாட்களாக குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்தது. இதனால் மனவேதனையில் இருந்த ஐயப்பன் நேற்று முன்தினம் அப்பகுதி விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: