பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது

 

ஜெயங்கொண்டம், ஏப்.13:அரியலூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த வேனு மகன் விஜய்(33). இவர் வி.கைகாட்டி கடைவீதியில் நின்று பொதுக் கூட்டத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் , பின்னர் போலீசார் எச்சரித்தும் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டிருந்தார். இதையடுத்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: