திருத்தணி, ஜூலை 18: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்தினால் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் என நகராட்சி தரப்பில் கருதப்படுகிறது.இந்நிலையில், திருத்தணியில் மழைநீர் சேகரிப்பு குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார். நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தளபதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.