கும்மிடிப்பூண்டி, ஜூலை 18:
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலானவை இரும்பு உருக்காலை மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலைகளில் இருந்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நச்சுக் புகை வெளியேற்றப்படுகிறது.இதனால் இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள கிராமங்களான பாப்பன்குப்பம், சித்தராஜ் கண்டிகை, சிறுபுழல்பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி, கோபால் ரெட்டி கண்டிகை, பழம்பாளையம், சிந்தலகுப்பம், ம.பொ.சி நகர், விவேகானந்தர் நகர், நாகராஜ் கண்டிகை, சாமிரெட்டி கண்டிகை ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள், இந்த நச்சுப் புகை கலந்த காற்ைற சுவாசிக்கின்றனர். இதனால், அவர்கள் சுவாச கோளாறு, கேன்சர் உள்பட பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.