பெரம்பலூர்,ஜூலை16: பெரம்பலூர்மாவட்ட விவசாயிகளுக்காக நுண்ணீர்ப் பாச னத் திட்டத்திற்கு ரூ24.55கோடி மானியம்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் (பொ) சந்தானகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தை மானியவிலையில் நிறுவும்பொருட்டு அரசுசார்பில் 2019& 20-20ம் ஆண்டிற்கு ரூ24.55 கோடியை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பிரதம மந்திரி யின் நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தை தமிழகம்முழுவதும் கொண்டுசேர்க்கும் முயற்சி யில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் இத்திட்டத்தை நிறு வும் பொருட்டு நடப்பாண்டில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் கருவிகள் வாங்குவதற்கு சிறு,குறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75சதவீத மானியமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் மாவட்ட விவ சாயிகளுக்கு ரூ24.55கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் இத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.