மஞ்சூர், ஜூலை 16:மஞ்சூர்-ஊட்டி சாலையில் காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு, மைனலாமட்டம், கிட்டட்டிமட்டம், பெங்கால்மட்டம், சாம்ராஜ் எஸ்டேட் சுற்றுபுற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் உலா வரும் காட்டெருமைகள், தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவதால் தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்க செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அது மட்டுமின்றி சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர் -ஊட்டி சாலையில் தேவர்சோலை அருகே 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நடுரோட்டில் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தது.