காரைக்குடி. ஜூலை 16: காரைக்குடி கழனிவாசல் சிறுவயல் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (53). இவரது வீட்டில் இவரது உறவுக்காரரான பூலாங்குறிச்சி சேர்ந்த ராமன் மகன் சதீஷ்குமார் (28) பத்து ஆண்டுகளுக்கு மேலாக தங்கி பேட்டரி கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சதீஷ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பூலாங்குறிச்சி திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு சதீஸ்குமார் தனது தாய் மெய்யாத்தாலுடன் வந்துள்ளார்.