பூதப்பாண்டி, ஜூலை 16: பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் பெரிய குளத்திற்கு பாசனத்திற்காக பூதப்பாண்டியிலுள்ள பழையாற்று செக்டேமிலிருந்து அரசியர் கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ேநற்று பிற்பகல் 3மணி அளவில் இறச்சகுளம் ஜீவா நகரில் திடீரென வெள்ளம் பெருகியது. இதனால் பதட்டமடைந்த மக்கள் பொதுப்பணித்துறை தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.