மேலூர், ஜூன் 27:மது போதையில் சுயநினைவை இழக்கும் குடிமகன்கள் மரங்களுக்கு தீ வைக்கும் அவலநிலை மேலூர் பகுதியில்
தொடர்கிறது. டாஸ்மாக் பார்களில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகம் என்பதால், மதுவை வாங்கும் பெரும்பாலன குடிமகன்கள் சாலை ஓரம், பாலத்தின் கீழ், மரத்தடி, சில சமயம் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி வளாகம் என சென்று மதுவை அருந்துகின்றனர். மேலூர் அழகர்கோவில் ரோட்டில் மாத்திக்கண்மாய் கரை ஓரமாக பழமையான பல அரச மற்றும் ஆலமரங்கள் கிளை பரப்பி எப்போது பசுமையாக காணப்படும். இரவு நேரத்தில் இந்த மரத்தை சுற்றி அமர்ந்து மது அருந்துபவர்கள், கடைசியில் அந்த மரத்திற்கே தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.