பெரம்பலூர், ஜூன் 27:பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
ஜூன் 27ம்தேதி சர்வதேச போதை ஒழிப்புதினமாகும். இதனையொட்டி பெரம்ப லூரில் நேற்று காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய பேரணியை பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் கொடியைசைத்துத் தொடங்கி வைத்தார். ஏடிஎஸ்பி ரெங்கராஜன் முன்னிலை வகித்தார். டிஎஸ்பிக்கள் பெரம்பலூர் ரவீந்திரன், மங்களமேடு தேவராஜ், டவுன் இன்ஸ்பெக்டர்(பொ) நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.பேரணியில் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர் திரளாக கலந்துகொண்டனர். அப்போது போதை விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பேனர்களை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியவாரும் சென்றனர். பேரணி வெங்கடேசபுரம்,கிருஷ்ணா தியேட்டர் வழியாக ரோவர் வளைவுப் பகுதியில் முடிவடைந்தது.