மன்னார்குடி, ஜூன் 25: மன்னார்குடி அருகே பாசனத்திற்கு தண்ணீர் தரக்கூடிய ஏரியில் உரிய அனுமதியின்றி வண்டல் மண் அடித்து ஏரியை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி த்த 2 லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் மன்னார்குடி தஞ்சாவூர் இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமம் உள்ளது. இக்கிராம எல்லைக்குள் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் நெடுவாக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்காக தண்ணீர் பெற்று வந்தன. சித்தேரி ஏரி போதிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக தூர்ந்து கிடக் கிறது.இந்நிலையில் நேற்று மதியம் சித்தேரி ஏரியின் ஒரு பகுதியில் சிலர் வண் டல் மண்ணை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி ஏரியை துர்த்து வருவ தாக நெடுவாக்கோட்டை கிராம மக்களுக்கு தகவல் சென்றது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இளைஞர்கள் திரண்டு சித்தேரி ஏரி பகுதிக்கு சென்று அங்கு வண்டல் மண் எடுத்து வந்த லாரிகளை மடக்கி விசாரித் துள்ளனர். பின்னர் மண் எடுத்து வந்த 2 லாரிகளை விவசாயிகள் சிறை பிடித் தனர்.பின்னர் சித்தேரி ஏரியை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி கிராம மக்கள், இளைஞர்கள் ஆசைத்தம்பி, என்பவர் தலைமையில் மேலவாசல் குமரபுரம் என்ற இடத்தில் மன்னார்குடி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திடீ ரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.