திருப்புத்தூர், ஜூன் 25: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் நேற்று மாலை திடீரென பலத்த இடி, காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கி 29ம் தேதி நிறைவடைந்தது. இருந்தாலும் தற்போது வரை கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. வெயிலின் தாக்கமும் குறையவில்லை, மழையும் பெய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். சாலைகளிலும் கானல் நீர் ஓடியது. மேலும் டூவீலர்களில் செல்லும் போது அனல் காற்று வீசியது. இந்நிலையில் திருப்புத்தூரில் நேற்று மதியம் வரை கடுமையாக தாக்கிய வெயில் மாலை 4 மணியளிவில் சற்று குறைந்தது.