சென்னை, ஜூன் 25: கோடம்பாக்கம் பாரதி காலனி 5வது தெருவை சேர்ந்தவர் ெவங்கட்ராமன் (45). சினிமா துறையில் சிகை அலங்காரம் செய்து வந்தார். இவருக்கு அய்மாவதி (41) என்ற மனைவியும், சுப்பிரமணியன், லஷ்யா வினை என்ற மகன்களும் உள்ளனர். வெங்கட்ராமன், பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அலங்காரம் செய்து உள்ளார். சமீபகாலமாக இவருக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படித்து வரும் மகன்களின் கல்வி செலவுக்காக வெங்கட்ராமன் பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், யாரும் அவருக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.