மதுரை, ஜூன் 21: போலீசாரை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல் தியாகு போலீசாரால் தாக்கப்பட்டதை கண்டித்தும், போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் திண்டுக்கல்லில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் திண்டுக்கல் வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரையிலும் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்கள் நேற்று பணிகளை புறக்கணித்தனர்.